பா.கே.ப!!!

பார்த்தது:

Oscar நாயகனுக்கு தமிழ் இசையுலகின் பாராட்டு விழா. இளையராஜா, M.S.விஸ்வநாதன், பாலமுரளி கிருஷ்ணா என இசை உலகின் ஜாம்பவான்கள் பலரும் ஒன்று திரண்டு திருவாளர் A.R.ரஹ்மானை ஏகமனதாக பாராட்டியதைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. ராஜா, MSV அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கேள்வி மேடையில் எழாமல் இல்லை. கடைசியில் ரஹ்மான், தான் எல்லாரது இசையின் கலவை என்றும் இரண்டு Oscar-கள் இந்திய இசைக்கு கிடைத்தது, அதை வாங்க மட்டுமே தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தன்னடக்கத்துடன் மொழிந்தது மிக மிக அருமை. இடையிடையே அவரது பாடல்கள் திரையிடப்பட்டன. அப்போது “கன்னத்தில் முத்தமிட்டால்” பாடல் வந்த போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்ததை மறுக்கமுடியாது. தேவி ஸ்ரீ பிரசாத் போன்றோரை மேடையேறி பேச வைத்தது கொஞ்சம் ஓவராக இருந்தது.

கேட்டது:

“வெண்ணிலா கபடிகுழு” திரைப்பட பாடல்கள். கடம் வித்வான் “விக்கு” விநாயக்ராம் அவர்களின் மைந்தர் திரு. செல்வ கணேஷ் அருமையாக இசையமைத்துள்ளார்.ஐந்து பாடல்களில் நான்கு பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்கும் ரகம். “லேசா பறக்குது”, “உயிரில் ஏதோ” பாடல்களில் நா.முத்துக்குமாரும், “பட பட” பாடலில் சினேகனும் கவிதை மழை பொழிந்துள்ளனர். பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் அருமை. சினிமாவில்தான் தாடி வச்சு அசிங்கமா இருந்தாலும் காதல் கைகூடுகிறது. நானும் தாடி வச்சிப் பார்க்கிறேன் ஒண்ணும் நடக்க மாட்டேங்கிது :(

பாடல் வரிகள் சில இங்கே:

“லேசா பறக்குது” பாடலில் இருந்து…

…காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மெளனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்..

…தத்தி தத்தி போகும் பச்சபுள்ள போல
பொத்தி வச்சுதானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையிரேன் சொகமா…

தொண்டை குழி தாண்டி வார்த்தை வரவில்லை
என்னென்னவோ பேச உதடு நெனைச்சது
பார்வையைப் பார்த்ததும் இதமா பதறுது

“பட பட” பாடலில் இருந்து…

…இதுவரை தொடர்ந்த தனிமை இன்று
துண்டாய் துண்டாய் உடைகிறதே
விரல்கள் பிடித்து நடக்கும்போது
வலிகள் யாவும் மறைகிறதே …

படித்தது:

இரண்டு Oscar வாங்கிய A.R.ரஹ்மானை அனைவரும் புகழ்ந்து கொண்டிருக்க, இந்தியாவின் முதல் Oscar விருதின் உரிமையாளர் ரசுல் பூக்குட்டி மறக்கப் பட்டிருக்கிறார். The Hindu-வில் அவரது நேர்காணல் கட்டுரை போன வெள்ளிக் கிழமை படித்தேன். உடைந்த மனதுடன் அவரது நிலையைப் பற்றி கூறியிருந்தார். அந்த கட்டுரையிலிருந்து…

…What was perhaps not plausible, or at least envisaged, is the attitude of the Hindi film industry to Resul, who became not only the first Indian but the first Asian to get the sound mixing award. “I have won an Oscar for the country. Nobody had even won an Oscar for technical expertise from Asia over the past 80 years. In Los Angeles, I got a standing ovation, but in my own (Hindi) film industry where I have worked for 13-14 years, people did not even bother to call me. Soon after the Oscars, I got SMS and phone calls from Mohanlal and Mammootty, besides a number of luminaries from Malayalam cinema even though I have not worked there for long…

…How does Resul look at the future? I would like to direct a Malayalam film. In future, I am going to work more on international projects. I have got offers already but I will work on international projects out of Mumbai. I am an Indian. I will work from India. I belong here.”

And Resul belongs to all of us. Bring on the sounds of India.

முழு நேர்காணலையும் படிக்க இங்கே சொட்டவும் <a href=”http://blogs.thehindu.com/films/?p=5191″>An unsung hero !!!</a>

~ by a n a n d h a m மேல் செப்டம்பர்7, 2010.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.