கொக்குக் குஞ்சுகளும் மூன்று நாட்களும் – பகுதி III
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ‘ஸ்ரீரங்கத்துக் கதை’ களின் கேவி, கோவிந்தன், குண்டு ரமணி, வி.ஜி.ஆர் மற்றும் சுஜாதா இவர்களுடன் பொழுது கழிந்தது. போதாதற்கு புகைபடக் கலை பற்றிய பத்திரிக்கை, இணையம், செய்திதாள், சமையல், தூக்கம் என இவையும் சேர்த்துக் கை கொடுத்தன. வாழ்க ஞாயிற்றுக்கிழமைகள். ‘டிரிங்கிள்வாடி’ என்ற மலை பிரதேசம் செல்லலாம் என்ற திட்டத்தை முந்தினமே கைவிட்டாயிற்று.
திங்கள் கிழமை – விஷேச விடுமுறை தினம். ஒரு திட்டத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. பல நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கும் ‘தாத்தா வீடு’ பற்றி எழுத வேண்டும் என்பதுவே அது. அதை எழுதத்தான் உட்கார்ந்து இங்கே வேறு எங்கேயோ பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. நானும் சராசரி மனிதன் தானே. மற்றவற்றின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கின்றேன்.
ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கொக்குக் குஞ்சுகளில் ஒன்றைக் காணவில்லை. கொஞ்சம் தேடியதில் அந்த குஞ்சு கொடுமைக்கார காகங்களுக்கு இரையாகிக் கொண்டிருந்தது. மற்ற இரண்டு குஞ்சுகள் பயந்து கூட்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தன. இதை நான் எழுதிக் கொண்டிருந்த வேளையில் மற்றொரு குஞ்சையும் காணவில்லை. கண்களால் பார்க்க முடிகிறது. ஆனால் எதுவும் செய்வதற்கியலவில்லை. அந்தக் குஞ்சுகளின் பெற்றோரும் அருகில் இல்லை. அருகில் இன்னொரு கூட்டில் இன்னொரு கொக்கு தனது அடைகாக்கும் தொழிலை எந்த சலனமும் இல்லாமல் செவ்வனே செய்து கொண்டிருந்தது.
அமைதியின் சின்னாமாகக் கூறப்படும் புறா ஒன்று கிளைவிட்டு கிளை இரை தேடி அலைந்து கொண்டிருக்கின்றது!!!
மூன்று நாட்கள் இப்படியாக ஒரு வருத்தமான முடிவுக்கு வந்தது…
—முற்றும்—






yavaloo vettiya irunthiganu azhaga explain pannirukinga:)